மந்திரவாதி வீட்டில் பெண் எரித்துக் கொலை?
சென்னை:சென்னை சூளைமேட்டில் உள்ள கேரள மந்திரவாதியின் வீட்டில் பெண் எரித்துக் கொல்லப்பட்டதாக பரபரப்புகிளம்பியுள்ளது.
சென்னை சூளைமேடு திருக்குமரன் நகரில் வசித்து வருபவர் இஸ்மாயில். 66 வயதான இவர் கேரளாவைச்சேர்ந்தவர். மாநகர போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
மாந்ரீகம் செய்வது, குறி சொல்வது, தாயத்து மந்திரித்துக் கட்டுவது உள்ளிட்டவற்றை செய்து வருகிறார். இதனால்வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் இவரது வீட்டுக்கு அதிக அளவில் கூட்டம் வரும்.
2 நாட்களுக்கு முன்பு இவரது வீட்டில் தீவிபத்து ஏற்பட்டது. அதில் அருகில் இருந்த குடிசைகளும் எரிந்துசாம்பலாயின. இதையடுத்து போலீஸார் அங்கு சென்று விசாரணை செய்தனர்.
அப்போது, தீ விபத்து ஏற்பட்ட இடத்திலிருந்து ஒரு இளம் பெண்ணின் கருகிய உடல் கண்டுபிடிக்கப்பட்டது.அவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தியபோது, வடபழனியைச் சேர்ந்த விஜயா என்பது தெரிய வந்தது.
இவர் எரித்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். அவர்களது சந்தேகம் மந்திரவாதிமீது திரும்பியுள்ளது. இதையடுத்து இஸ்மாயிலிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications