சரக்குக் கப்பலைத் தகர்த்த கடற் புலிகள்
கொழும்பு:இலங்கையில், சரக்குக் கப்பல் ஒன்றை நடுக் கடலில் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட படகில் சென்று மோதிகடற்புலிகள் பிரிவு தகர்த்தது. இதில் உயிரிழப்பு குறித்து உடனடி தகவல் ஏதும் இல்லை. இந்தக் கப்பலில்இருந்தவர்களில் 2 பேர் இந்தியர்கள் என கூறப்படுகிறது.
இலங்கையின் கிழக்கில் உள்ள வாகரையைப் பிடித்து விட்டதாக ராணுவம் கூறியுள்ளது. இருப்பினும் அங்குதொடர்ந்து கடும் சண்டை நடந்து வருகிறது. ஆயிரக்கணக்கான தமிழர்கள் உயிர் தப்பி தெற்கு நோக்கி இடம்பெயர்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில், லிவர்பூல் நகரிலிருந்து ஒரு தனியார் கப்பல் கோதுமை மூடைகளுடன் காங்கேசன் துறைதுறைமுகத்திற்கு வந்தது. அக்கப்பலில் 19 ஊழியர்கள் இருந்தனர். இவர்களில் 10 பேர் சிங்களர்கள், 7 பேர்இந்தோனேசியாவைச் சேர்ந்தவர்கள். 2 பேர் இந்தியர்கள்.
காங்கேசன் துறையில் ராணுவத்தினருக்கு கோதுமை மூட்டைகளை இறக்கி விட்டு கப்பல் கிளம்பியது. பருத்தித்துறை பகுதியில் கப்பல் போய்க் கொண்டிருந்தபோது, வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட புலிகளின் படகு, அந்தசரக்குக் கப்பலின் மீது மோதியது.
இதில் கப்பல் வெடித்து தீப்பிடித்து எறிந்தது. மேலும் சில படகுகளில் வந்த கடற்புலி வீரர்கள் கப்பல் மீதுசரமாரியாக தாக்குதல் நடத்தினர்.
இதையடுத்து கப்பலில் பாதுகாப்புக்காக இருந்த கடற்படை வீரர்கள், படகில் இருந்தவர்களை துப்பாக்கியால்சுட்டனர். தகவல் அறிந்தது விமானப்படை ஹெலிகாப்டர்கள் அங்கு வந்து புலிகளின் படகுகள் மீது தாக்குதல்நடத்தின.
இதையடுத்து இரு தரப்புக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை நடந்தது.
இந்த சண்டையில் விடுதலைப் புலிகளின் 2 படகுகள் கடலில் மூழ்கடிக்கப்பட்டன.
கப்பல் மோது வெடிகுண்டு நிரப்பப்பட்ட படகு மோதியதில் அதில் இருந்த ஊழியர்கள் கதி என்ன ஆனதுஎன்பது தெரியவில்லை.












Click it and Unblock the Notifications