பாமக மிரட்டல்: பள்ளி-கல்லூரிகளில் கஞ்சா ரெய்ட்
சென்னை:சென்னை நகரில் பள்ளிகள், கல்லூரிகள் அருகேயும், உள்ளேயும் கஞ்சா விற்பனைநடைபெறுவதாக சட்டசபையில் பாமக பகிரங்கமாக புகார் கூறியதையடுத்து 50தனிப்படைகள் அமைக்கப்பட்டு கஞ்சா ரெய்டு நடந்து வருகிறது.
தமிழக சட்டசபையில் நேற்று பாமக இப்பிரச்சினையக் கிளப்பியது. பள்ளிக்கூடங்கள்,கல்லூரிகள், வழிபாட்டுத் தலங்கள் அருகே கஞ்சா, அபின் போன்ற போதைப்பொருட்கள் விற்பனை அமோகமாக நடைபெறுவதாகவும், குடிசைப் பகுதிகளில்சாராய விற்பனை கன ஜோராக நடப்பதாகவும் பாமக குற்றம் சாட்டியது.
மேலும், போலீஸார் இதை கண்டுகொள்ளாமல் இருப்பதை கண்டித்து பிப்ரவரி 2ம்தேதி போராட்டம் நடத்தப் போவதாக பாமக நிறுவனர் ராமதாஸும் அறிவித்துள்ளார்.
பாமக மிரட்டல் விடுத்த அடுத்த 4 மணி நேரத்தில் சென்னை நகரில் நேற்று 50 தனிபோலீஸ் படைகள் அமைக்கப்பட்டன.
கஞ்சா ரெய்டை காவல்துறை முடுக்கி விட்டுள்ளது. பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள்அருகே கஞ்சா விற்கப்படும் இடங்களில் போலீசார் சோதனை நடத்தினர்.
இந்த ரெய்டில் பல கஞ்சா வியாபாரிகள் சிக்கினர். இணை ஆணையர்கள் ரவி, சந்தீப்ராய் ரத்தோர், துரைராஜ் ஆகியோரது தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்ததனிப்படைகளில் நகரின் அனைத்துப் பகுதிகளிலும் தீவிர வேட்டையில் இறங்கின.
புறநகர்ப் பகுதிகளிலும் போலீஸ் ரெய்டு நடந்தது. இந்த நடவடிக்கை தொடர்ந்துநடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications