பஸ்-சரக்கு ரயில் மோதல்: பயணிகள் தப்பினர்
சென்னை:சென்னை கொருக்குப்பேட்டை அருகே சரக்கு ரயிலும் பஸ்சும் மோதிக் கொண்டன. ஆனால், அதிர்ஷ்டவசமாகபயணிகள் அனைவரும் உயிர் தப்பினர்.
கார்னேசன் நகர் எண்ணூர் சாலையில் ஆளில்லா ரயில்வே கேட் உள்ளது. இந்தியன் ஆயில் கார்ப்பரேசன்நிறுவனத்துக்கு இந்த வழியாக சரக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இங்கு அடிக்கடி விபத்துகள் நடந்ததால் ஆளில்லா ரயில்வே சந்திப்பில் கேட் அமைக்கப்பட்டது. ஆனால்,இன்னும் ஊழியர்கள் நியமிக்கப்படவில்லை.
இன்று காலை உயர் நீதிமன்றத்தில் இருந்து தண்டையார் பேட்டைக்கு கதிர்வேல் என்ற டிரைவர் 44 சி அரசுபஸ்ஸை ஓட்டிச் சென்றார்.
ஆளில்லா கேட்டில் ரயில் வருவதை பார்க்காமல் பஸ்ஸை தண்டவாளத்தின் மீது டிரைவர் ஓட்டினார். ரயில்வருவதைப் பார்க்காமல் பொறுப்பின்றி டிரைவர் பஸ்ஸை ஓட்ட, ரயிலை பார்த்துவிட்ட பயணிகள் பதறிஅலறினர். இதையடுத்து சடன் பிரேக் போட்டார் டிரைவர்.
ஆனாலும் பஸ்சின் முன் பக்கம் தண்டவாளத்தை நெருங்கிவிட்டது. பஸ்சின் முன் பக்கம் சிறிய அளவில்தண்டவாளத்தை எட்டிக் கொண்டிருந்த நிலையில் அதன் மீது ரயில் மோதியது.
ரயிலை கவனிக்காமல் பஸ்ஸை ஓட்டினாலும், பின்னர் அவசரமாக செயல்பட்டு பிரேக்கை போட்டு பஸ்ஸைநிறுத்தியதால் தான் பெரும் விபத்தை தவிர்த்துள்ளார் டிரைவர்.












Click it and Unblock the Notifications