சிவகாசி பட்டாசு ஆலையில் தீ: 3 பேர் பலி
சிவகாசி:சிவகாசி அருகே பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 3 பேர் கருகி பலியானார்கள்.
சிவகாசியை அடுத்துள்ள மாரனேரி அருகே துரைச்சாமி புரம் என்ற இடத்தில் தனியாருக்குச் சொந்தமானபட்டாசுத் தொழிற்சாலை உள்ளது. இங்கு பட்டாசு தயாரிக்கவும் இருப்பு வைக்கவும் 54 அறைகள் உள்ளன.அக்கம் பக்கத்து கிராமங்களைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்டவர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.
வானவெடி தயாரிக்கும் அறையில் லட்சுமி, முருகன், ஜோதிலட்சுமி ஆகிய தொழிலாளர்கள் வெடி தயாரிப்பில்ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென வெடிகள் பலத்த சப்தத்துடன் வெடித்து சிதறி தீவிபத்து ஏற்பட்டது.
பயங்கர சப்தத்துடன் வெடிகள் அனைத்தும் வெடித்துச் சிதறின. இதனால் அந்த தொழிற்சாலை முழுவதும்தீப்பிடித்துக் கொண்டது. இதில் முருகன், ஜோதிலட்சுமி, லட்சுமி ஆகிய 3 பேரும் உடல் கருகி பலியாயினர். 8பேருக்கு காயம் ஏற்பட்டது.
தீயணைப்பு வீரர்கள் சுமார் 4 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.












Click it and Unblock the Notifications