கப்பலில் ராணுவ அதிகாரி மர்ம சாவு!

Subscribe to Oneindia Tamil

சென்னை:சென்னை வந்த கப்பலில் பயணித்த ராணுவ அதிகாரி, பூட்டிய அறைக்குள், உட்கார்ந்த நிலையிலேயேபிணமானார். அவர் இயற்கையாக இறந்தாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்துவிசாரணை நடந்து வருகிறது.

இங்கிலாந்தைச் சேர்ந்த ஆர்ட்டிமிஸ் என்ற பிரமாண்ட சொகுசு பயணிகள் கப்பல் கடந்த டிசம்பர் 2ம் தேதி 1000பயணிகளுடன் கொச்சிக்குக் கிளம்பியது. லண்டனிலிருந்து கிளம்பிய இக்கப்பல், நேற்று சென்னைக்கு வந்தது.

எரிபொருள் நிரப்பிக் கொண்டு மீண்டும் கொச்சிக்குக் கிளம்பத் தயாரானபோது கப்பலின் கேப்டனுக்கு ஒருதகவல் கிடைத்தது. பயணி ஒருவர் பூட்டிய அறைக்குள் உட்கார்ந்த நிலையில் பிணமாக கிடப்பதாக வந்ததகவலால் கப்பல் புறப்படுவது நிறுத்தப்பட்டது.

துறைமுகம் போலீஸாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டு துணை ஆணையர் சூடேஸ்வரன் தலைமையில் போலீஸார்கப்பலுக்கு விரைந்தனர். பின்னர் அந்த அறைக் கதவு உடைக்கப்பட்டு போலீஸார் உள்ளே சென்றுபார்த்தனர்.

அங்கு ஒரு இருக்கையில் அமர்ந்தபடி ஒருவர் பிணமாகக் கிடந்தார். அவருக்கு அருகே நிறைய மது பாட்டில்கள்இருந்தன.அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் அவர் இறந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. அல்லதுதற்கொலை முயற்சியாஎன்பது குறித்தும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இறந்த பயணியின் பெயர் ஜோசப் தாமஸ் கால்வார்க். 55 வயதாகும் இவர் இங்கிலாந்து ராணுவத்தில் பணியாற்றிஓய்வு பெற்ற அதிகாரி ஆவார். டோண்ட் டிஸ்டர்ப் மீ என்ற வாசகத்தை கதவுக்கு வெளியே எழுதி வைத்து விட்டு2 நாட்களாக அறையைப் பூட்டிக் கொண்டு மது அருந்தியுள்ளார் ஜோசப்.

அவரது உடல் பிரேதப் ப>சோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டது. அதன் பின்னர் உடல் இங்கிலாந்துக்கு அனுப்பி வைக்கப்படும் எனத் தெ>கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+