துபாய் நீச்சல் குளத்தில் இந்திய சிறுவன் மரணம்
Subscribe to Oneindia Tamil
துபாய்:துபாயில் நீச்சல் குளத்தில் மூழ்கி 9 வயது இந்தியச் சிறுவன் பரிதாபமாக இறந்தான்.
கேரள மாநிலம் செங்கனச்சேரி மாவட்டம் நாலுகுடா கிராமத்தைச் சேர்ந்தவர் சாபு சாக்கோ. இவர் குடும்பத்துடன்துபாயில் வசித்து வருகிறார். இவருக்குச் சொந்தமான பண்ணை இல்லத்தில் உள்ள நீச்சல் குளம் அருகே இவரதுமகன் ஷ்ரேயாஸ் சாக்கோ விளையாடிக் கொண்டிருந்தான்.
அப்போது அவன் வைத்திருந்த ஒரு பொம்மை நீச்சல் குளத்தில் விழுந்து விட்டது. அதை எடுப்பதற்காக குளத்தில்இறங்கினான் ஷ்ரேயாஸ். அவனுக்கு நீச்சல் தெரியாது என்பதால் குளத்தில் மூழ்கி துடிதுடித்து இறந்தான்.












Click it and Unblock the Notifications