கொழும்பு-புலிகளின் 2 படகுகள் மூழ்கடிப்பு
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:கொழும்பு அருகே விடுதலைப் புலிகளின் 2 படகுகளை தாக்கி அழித்து விட்டதாக இலங்கை கடற்படைகூறியுள்ளது.
இதுகுறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் பிரசாத் சமரசிங்கே கூறுகையில், கடற்படை தாக்குதல் கப்பல்கள்வழக்கமா ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தன.
அப்போது கொழும்பு அருகே தடை செய்யப்பட்ட பகுதியில் விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் பிரிவினர்தங்களது படகுகளில் வந்து கொண்டிருந்தனர்.
உடனடியாக சரணடையுமாறு கடற்படை எச்சரித்தது. ஆனால் அதை புலிகள் கண்டுகொள்ளாமல் தொடர்ந்துசென்றனர். இதையடுத்து அந்தப் படகுகள் மீது கடற்படை தாக்குதல் நடத்தியது.
இதில் 2 படகுகள் முழுமையாக மூழ்கடிக்கப்பட்டன. அதில் எத்தனை பேர் இருந்தனர் என்பது தெரியவில்லைஎன்றார்.












Click it and Unblock the Notifications