வைகோவுக்கு எல்.ஜி-செஞ்சி புதிய கிடுக்கிபிடி
சென்னை:மதிமுக பொறுப்புகளிலிருந்து நிரந்தரமாக தங்களை நீக்கி வைகோ தலைமையில் நடந்த மதிமுக பொதுக் குழுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் நீதிமன்ற அவமதிப்பு செயலாகும். எனவே, அந்தத் தீர்மானமும்,பொதுக்குழுக் கூட்டமும் செல்லாது என்று அறிவிக்கக் கோரி எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோர்வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இதுதொடர்பாக இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், மதிமுகவில் அவைத்தலைவராகவும், துணைப் பொதுச் செயலாளராகவும் நாங்கள் செயல்பட்டு வந்தோம்.வைகோவின் கட்சி நடவடிக்கை சரியில்லை என்பதால் அவரை விமர்சித்தோம். இதையடுத்து எங்களது கட்சிபொறுப்புகளிலிருந்து தற்காலிகமாக நீக்குவதாக கம்பத்தில் கூட்டிய மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில்தீர்மானம் பாட்டனர்.
அது செல்லாது என்று அறிவிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உயர்நீதிமன்றம்இடைக்காலத் தடையும் விதித்துள்ளது.
ஆனால் கடந்த 10ம் தேதி வைகோ சென்னையில் கூட்டிய பொதுக்குழுக் கூட்டம், அவைத் தலைவரான நான்(கணேசன்) இல்லாமலேயே நடந்துள்ளது. முறையாக கூட்டப்படவில்லை.
மேலும், கோர்ட் தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில், எங்களை கட்சிப் பொறுப்புகளிலிருந்து நிரந்தரமாகநீக்குவதாக தீர்மானம் போட்டுள்ளனர். இது நீதிமன்ற அவமதிப்பு செயலாகும்.
எனவே இதை கோர்ட் அவமதிப்பு செயலாக அறிவித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுகோரியுள்ளனர்.
திங்கள்கிழமை நீதிபதி நாகப்பன் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு வருகிறது.












Click it and Unblock the Notifications