அதிமுக-மதிமுக எம்.எல்.ஏக்கள் வெளியேற்றம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை:கடந்த ஐந்து நாட்களாக சட்டசபையிலிருந்து வெளிநடப்புச் செய்து வந்த அதிமுக, மதிமுக எம்.எல்.ஏக்களைஇன்று அவைக் காவலர்களை வைத்து வெளியேற்ற உத்தரவிட்டார் சபாநாயகர் ஆவுடையப்பன்.

சென்னை மாநகராட்சித் தேர்தல் வன்முறைக்குப் பொறுப்பேற்று முதல்வர் கருணாநிதி, உள்ளாட்சித் துறைஅமைச்சர் ஸ்டாலின் ஆகியோர் பதவி விலக வேண்டும் என்று கோரி அதிமுக, மதிமுக எம்.எல்.ஏக்கள் கடந்தஐந்து நாட்களாக சட்டசபையிலிருந்து வெளிநடப்புச் செய்து வந்தனர்.

இடையில் ஒரு நாள் கருப்புச் சட்டை, சேலை, ஜாக்கெட் அணிந்து வந்து நூதனப் போராட்டமும் நடத்தினர்.

இந்த நிலையில் கூட்டத் தொட>ன் கடைசி நாளான இன்றும் சபை கூடியதும் அதிமுக மற்றும் மதிமுகஉறுப்பினர்கள் எழுந்து தங்களது கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

அவர்களை அமைதியாக அமருமாறு சபாநாயகர் ஆவுடையப்பன் கூறினார். ஆனால் தொடர்ந்து இருகட்சியினரும் கோஷமிட்டுக் காண்டிருந்ததால் அவைக் காவலர்களை அழைத்து அவர்களை வெளியேற்றசபாநாயகர் உத்தரவிட்டார்.

இதையடுத்து அவைக் காவலர்கள் அதிமுக, மதிமுக எம்.எல்.ஏக்களை சபையிலிருந்து வெளியேற்றினர்.வெளியேற மறுத்த சிலரை இழுத்துச் சென்று வெளியேற்றினர்.

பின்னர் வெளியே வந்த இரு கட்சியினரும் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் மமு.க தலைவர் கண்ணப்பன்தலைமையில் சிறிது நேரம் கோஷமிட்டுவிட்டு கலைந்து சென்றனர்.

தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை அறப்போராட்டம் தொடரும் என ஓ.பன்னீர்செல்வம்செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+