கார் விபத்தில் தப்பிய முதல்வரின் மகள் செல்வி!
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம் அருகே இன்று காலை நடந்த சாலை விபத்தில் முதல்வர் கருணாநிதியின் மகள்செல்வி காயமின்றி தப்பினார்.
முதல்வர் கருணாநிதியின் மகள் செல்வி. இவர் பெங்களூரில் வசித்து வருகிறார். இன்று காலை கார் மூலம் அவர்திருவாரூர் சென்று கொண்டிருந்தார்.
கல்பாக்கம் அருகே வடபட்டினம் என்ற கிராமத்தில், கிழக்குக் கடற்கரை சாலையில் அவரது கார் காலை 6.30மணியளவில் சென்று கொண்டிருந்தது.
அப்போது ரங்கநாதன் என்பவர் தனது மாட்டு வண்டியில் மணல் ஏற்றிக் கொண்டு சென்றார். மாடு அங்கும்இங்கும் திமிரியதில் வண்டி நடுரோட்டில் அல்லாடியபடி சென்றது.
இதனால் செல்வி சென்ற கார் முன்னால் சென்ற மாட்டு வண்டி மீது மோதியது. இதில் காரின் முன் பகுதிசேதமடைந்தது. விபத்தில் செல்விக்கு காயம் ஏதும் இல்லை.












Click it and Unblock the Notifications