சூரத்: பள்ளிக்கூடம் இடிந்து 13 மாணவிகள் பலி
சூரத்:சூரத் அருகே தீச்சக்புரா என்ற இடத்தில் பள்ளிக்கூட மாடிப்படி கைப் பிடிச் சுவர் இடிந்து விழுந்ததில் 13மாணவிகள் பரிதாபமாக பலியாயினர். 14 மாணவிகள் காயமடைந்தனர்.
சூரத்திலிருந்து 90 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தீச்சக்புரா என்ற இடத்தில் ஆதர்ஷ் நிவாசி ஷாரா என்றஉறைவிடப்பள்ளி உள்ளது. மலைவாழ் பழங்குடியின மாணவியருக்கான பள்ளிக்கூடம் இது.
இங்கு 13 வயது முதல் 16 வயது வரையிலான பழங்குடியின மாணவிகள் தங்கிப் படித்து வருகின்றனர். நான்குமாடிகளைக்கொண்டது இந்தப் பள்ளி.
நேற்று மாலை 5.30 மணிக்கு மாடிக்குச் செல்லும் படிக்கட்டின் கைப்பிடிச் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதில்பள்ளியில் படித்துக் கொண்டிருந்த 13 மாணவிகள் சம்பவ இடத்திலேயே பலியாயினர். 14 பேர் படுகாயம்அடைந்தனர்.
இறந்தவர்களில் தர்மிஷ்டா செளத்ரி, பிரேமிகா செளத்ரி, பீரேம்பிகா செளத்ரி, தேஜால் காமிட் ஆகியோரின்உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. மற்றவர்கள் யார் என்பதைக் கண்டறிய நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளது.
மீட்புப் பணிகள் முழுவதும் முடிந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பர்டோலி, காகர்புரா, சூரத் ஆகியஇடங்களில் உள்ள மருத்துவமனைகளில் காயமடைந்தவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications