சிறப்பு ரயில்கள் மூலம் ரூ. 23 கோடி வசூல்!
சென்னை:பண்டிகைக் காலங்களில் இயக்கப்பட்ட சிறப்பு ரயில்கள் மூலம் தெற்கு ரயில்வேக்கு ரூ. 23 கோடி வருவாய்கிடைத்துள்ளதாக தெற்கு ரயில்வே பொதுமேலாளர் தாமஸ் வர்கீஸ் கூறினார்.
அவர் கூறுகையில், இந்த ஆண்டு தென்னக ரயில்வேயில் சரக்கு போக்குவரத்து 15 சதவீதம் அதிகரித்துள்ளதால்வருவாய் 19 சதவீதம் அதிகரித்துள்ளது.
பயணிகள் போக்குவரத்து 12 சதவீதம் உயர்ந்துள்ளதால் 21 சதவீதம் வருவாய் அதிகரித்துள்ளது. பார்சல்போக்குவரத்து 50 சதவீதம் கூடியுள்ளது. ரயில்களில் முறைகேடாக பயணம் செய்தவர்களை பிடித்து அபராதம்வசூலித்த வகையில் வருவாய் 16 சதவீதம் அதிகரித்துள்ளது.
பயணிகள் போக்குவரத்து அதிகம் உள்ள இடங்களுக்கு தேவைக்கேற்ப அவ்வப்போது சிறப்பு ரயில்கள்இயக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் நடப்பு ஆண்டில் ஆயிரத்து 500 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டதன்மூலம் தெற்கு ரயில்வேக்கு ரூ. 23 கோடி வருவாய் கிடைத்துள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications