மேலும் 2 டன் இரும்புக் குண்டுகள் சிக்கின!
சென்னை:சென்னையில் இலங்கைக்கு அனுப்ப பதுக்கி வைக்கப்பட்டிருந்த மேலும் 2 டன் இரும்புக் குண்டுகள் சென்னையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சமீபத்தில் இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 100 மூட்டை இரும்புக் குண்டுகள் சென்னை மற்றும் தூத்துக்குடியில் பறிமுதல் செய்யப்பட்டன. கண்ணிவெடி தயாரிப்பதற்கு இந்த இரும்புக் குண்டுகள் பயன்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தக் கடத்தல் தொடர்பாக இலங்கையைச் சேர்ந்த சிவகரன் மற்றும் 4 பேர் உள்பட 9 பேரை கியூ பிரிவு போலீஸார் கைது செய்தனர். இவர்களுக்குஇரும்புக் குண்டுகளை வாங்கி சென்னைக்கு அனுப்பிய தமிழகத்தைச் சேர்ந்த இருவர் மும்பையில் பிடிபட்டனர்.
இந்த நிலையில் சிவகரன் உள்ளிட்ட ஐந்து இலங்கைத் தமிழர்களையும் ரகசிய இடத்தில் வைத்து கியூ பிரிவு போலீஸார் தீவிரமாக விசாரித்துவருகின்றனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் சென்னை பெரியமேட்டில் உள்ள ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 டன் இரும்புக்குண்டுகளை போலீஸார் மீட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications