For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டெலிபோன் கட்டணம் மேலும் குறைகிறது!

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:நாடு முழுவதும் தொலைபேசி கட்டணங்கள் மேலும் குறையும் என தொலை தொடர்பு ஒழுங்குமுறைஆணையம் (டிராய்) தெரிவித்துள்ளது.

இதுகுறுத்து டிராய் நிறுவன உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், உலகத்திலேயே இந்தியாவில்தான்தொலைபேசிகள் மற்றும் செல்போன்களின் மிகக் கட்டணங்கள் குறைவாக உள்ளன.

இதை இன்னும் குறைத்து தொலைபேசி மற்றும் செல்போன்களை பயன்படுத்துகிறவர்களின் எண்ணிக்கையைஅதிகரிக்கச் செய்ய தொலை தொடர்பு ஆணையம் முடிவு செய்துள்ளது.

கட்டணங்களை குறைக்க, தற்போது ஏடிசி எனப்படும் உபகரணங்கள் இணைப்பு கட்டணம் தடையாகஇருக்கிறது. ஆண்டுதோறும் தனியார் தொலைபேசி நிறுவனங்கள் தங்களது வருவாயில் 1.5 சதவீதத்தைபிஎஸ்என்எஸ் நிறுவனத்துக்கு ஏடிசி கட்டணமாக செலுத்தி வருகின்றன.

அதே போல இந்தியாவுக்கு வரும் சர்வதேச தொலைபேசி அழைப்புகளில் 1 நிமிட கட்டணத்தில் 1.ரூபாயையும், இந்தியாவில் இருந்து அழைக்கப்படும் சர்வதேச அழைப்புகளில் 80 பைசாவையும் தனியார்தொலைத் தொடர்பு நிறுவனங்களிடம் இருந்து பிஎஸ்என்எல் வசூலிக்கிறது.

இந்த ஏடிசி கட்டணத்தை படிப்படியாக குறைத்து, இறுதியில் முழுமையாகவே ரத்து செய்துவிட தொலைதொடர்பு ஆணையம் முடிவு செய்துள்ளது.

ஏற்கனவே இந்த ஏடிசி கட்டணத்தை தொலைதொடர்பு ஆணையம் குறைத்ததால் உள்நாட்டில் எஸ்டிடிகட்டணமும், ஐஎஸ்டி கட்டணமும் குறைந்தது. மேலும் வெளிநாடுகளில் இருந்து வரும் அழைப்புகளுக்கானகட்டணங்களும் குறைந்தன.

ஆனால் இதற்கு பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் இருந்து கடும் எதிர்ப்பு வந்தது. ஏனென்றால் அதன் வருவாய்குறைந்தது.

கடந்த ஆண்டு (2005-2006) ரூ. 5,340 கோடியாக இருந்த ஏடிசி கட்டணம் நடப்பு ஆண்டு (2006-2007) ரூ.3,335 கோடியாக குறைக்கப்பட்டது.

இதன் காரணமாக பிஎஸ்என்எல் உள்பட அனைத்து தொலைபேசி சேவைகளை நடத்தும் நிறுவனங்களும்எஸ்டிடி கட்டணத்தை குறைத்து ஒரே இந்தியா திட்டத்தை அமல்படுத்த முடிந்தது என்றார்.

இந் நிலையில் ஏடிசி கட்டணத்தை ரத்து செய்தால் தொலைபேசி கட்டங்கள் மேலும் குறையும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X