சென்னை விமான நிலைய திருட்டு கும்பல் கைது!
சென்னை:வெளிநாடுகளில் இருந்து சென்னை வரும் பயணிகளின் பெட்டிகளை உடைத்து, அவற்றில் உள்ள நகை, மொபைல் போன் உள்ளிட்ட பொருட்களைகொள்ளையடித்த 7 பேரை விமான நிலைய போலீசார் கைது செய்துள்ளனர்.
இவர்கள் விமான நிலையத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றின் ஒப்பந்த ஊழியர்கள் ஆவர். கூட்டாக சேர்ந்து கடந்த பல ஆண்டுகளாக பயணிகளின்பொருட்களை கொள்ளையடித்து வந்துள்ளனர்
கடந்த மாதம் 19ம் தேதி துபாயில் இருந்து சென்னை வந்த தஞ்சாவூரைச் சேர்ந்த செல்வம், தாம்பரத்தைச் சேர்ந்த பாலு மற்றும் குரோம் பேட்டையைச் சேர்ந்தஏழுமலை ஆகியோரின் பெட்டிகள் உடைக்கப் பட்டு, நகை மற்றும் செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்டன.
இதுகுறித்து விமான நிலைய போலீஸாரிடம் புகார் கொடுக்கப்பட்டது. இதையடுத்து தனிப்படை அமைத்து விசாரணை நடந்தது.
இதில், விமான நிலைய ஒப்பந்த தொழிலாளர்கள் சிலர் கொள்ளையில் ஈடுபட்டுள்ளதும், துபாய் மற்றும் லண்டன் விமானங்களில் கடந்த சில ஆண்டுகளாகவேஇதுபோன்ற திருட்டுகள் நடப்பதும் தெரிய வந்தது.
போலீசாரிடம் கர்நாடகா கமர்சியல் மற்றும் இன்டஸ்டிரியல் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்த விஜய்கணேஷ் மற்றும் வெங்கடேசன்,ஐயப்பன், காமராஜ், முத்துராஜ், ஞானகுமார் மற்றும் சாலமன் ஆகிய ஊழியர்கள் சிக்கினர்.
இவர்களிடமிருந்து ரூ. 5 லட்சம் மதிப்புள்ள லேப்-டாப், வீடியோ கேமராக்கள், செல்போன்கள், கேமராக்கள், வாட்சுகள் மற்றும் தங்க நகைகள் மீட்கப்பட்டன.
இந்த 7 பேரையும் போலீசார் ஆலந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
கடந்த சில ஆண்டுகளாகவே துபாய் மற்றும் லண்டன் பயணிகளின் பொருட்கள் கொள்ளை போயுள்ளன. இது குறித்து வெளியே தெரிந்தால் தங்கள் நிறுவனத்தின்பெயர் கெட்டுவிடும் என்று கருதிய விமான நிறுவனங்கள் பயணிகளை சமாதானப்படுத்தி, ஒரு சிறிய தொகையை நஷ்ட ஈடாக கொடுத்து சரிக்கட்டி வந்தன.
கடந்த மூன்று ஆண்டுகளாக நடந்துள்ள திருட்டுகள் குறித்து விசாரணை நடத்த பரங்கிமலை உதவி கமிஷனர் அருண் உத்தரவிட்டுள்ளார். இதன் அடிப்படையில்கடந்த 2004, 2005 மற்றும் 2006 ஆகிய ஆண்டுகளில் பயணிகளின் புகார்கள் சம்பந்தமான விவரங்களை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விசாரணையின் போது மூடி மறைக்கப்பட்ட புகார்கள் குறித்த தகவல்கள் கிடைக்கும் என்று தெரிகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications