மக்கள் அமைதி காக்க குமாரசாமி கோரிக்கை
பெங்களூரு:காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்புக்கு எதிராக கர்நாடக மக்கள் வன்முறையில் ஈடுபடக் கூடாது, அமைதி காக்க வேண்டும் என்று கர்நாடகமுதல்வர் குமாரசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
காவிரி நடுவர் மன்றம் இன்று தனது இறுதித் தீர்ப்பை அறிவித்தது. இதையடுத்து கர்நாடகத்தில் பதட்டம் நிலவுகிறது. இந்த நிலையில் தீர்ப்பு குறித்துகருத்து தெரிவித்துள்ள கர்நாடக முதல்வர் குமாரசாமி, மக்கள் உணர்ச்சிவசப்படக் கூடாது. அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில்வன்முறையில் இறங்கக் கூடாது.
தீர்ப்பு குறித்து நீர்ப்பாசனத் துறை நிபுணர்களுடன் அரசு ஆலோசனை நடத்தி தேவையான அடுத்த கட்ட நடவடிக்கையை மாநில அரசு எடுக்கும்.
இன்று மாலை அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. தீர்ப்பு நகல் கைக்கு கிடைக்காத வரையில் முழுமையாக அதுகுறித்து கருத்துக் கூறமுடியாது.
மக்களும், விவசாயிகளும் அரசுடன் ஒத்துழைத்து அமைதி காக்க வேண்டும். சட்டத்திற்கு உட்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் அரசுகண்டிப்பாக எடுக்கும் என்றார் குமாரசாமி.












Click it and Unblock the Notifications