அநீதி, மேல் முறையீடு செய்வோம்: கர்நாடகம்
Subscribe to Oneindia Tamil
பெங்களூரு:தமிழகத்துக்கு 419 டிஎம்சி நீரை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டதன் மூலம் கர்நாடகத்துக்கு அநீதி விளைவிக்கப்பட்டுள்ளதாக அம் மாநிலசட்ட அமைச்சர் எம்.சி. நானையா கூறியுள்ளார்.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து நடுவர் மன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்படும் என அவர் அறிவித்துள்ளார்.
நடுவர் மன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து 90 நாட்களுக்குள் மேல் முறையீடு செய்ய கால அவகாசம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்துக்கு 205 டிஎம்சி நீரை வழங்க நடுவர் மன்றம் 1991ம் ஆண்டு அளித்த தீர்ப்பை ரத்து செய்து கர்நாடகம் ஒரு அவசர சட்டம் கொண்டுவந்தது. ஆனால், அந்த சட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்யது நினைவுகூறத்தக்கது. இந்த உத்தரவை அமல் செய்யும் வகையில் அதை மத்தியஅரசு கெஜட்டிலும் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications