கேரளாவில் கோவை ரயில்கள் மறிப்பு!

Subscribe to Oneindia Tamil

பாலக்காடு:சேலம் ரயில்வே கோட்டத்தை எதிர்த்து பாலக்காட்டில் ரயில் மறியல் போராட்டம் நடந்தது. இதனால் கோவைவழியாக செல்லும் ரயில்கள் தடுத்து நிறுத்தப்பட்டது.

கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள ரயில்வே கோட்டத்தைப் பிரித்து, தமிழகத்தின் மேற்குப் பகுதியில் உள்ளபகுதிகளை இணைத்து புதிய ரயில்வே கோட்டத்தை, சேலத்தைத் தலைமையிடமாகக் கொண்டு அமைக்கரயில்வே துறை முடிவு செய்துள்ளது.

ஏப்ரல் 14ம் தேதி இதற்கான கால்கோள் விழா சேலத்தில் நடைபெறவுள்ளது. ஆனால் தேவையில்லாமல் சேலம்கோட்டத்திற்கு கேரளா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தமிழகப் பகுதிகளை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளகேரளா பிரம்மப் பிரயத்தனம் செய்து வருகிறது.

இந்த நிலையில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் பாலக்காட்டில் நேற்று ரயில் மறியல்போராட்டத்தில் குதித்தனர். பாலக்காடு அருகே உள்ள ஒலவக்காடு ரயில் நிலையத்தில் இந்தப் போராட்டம்நடந்தது. கேரளாவிலிருந்து கோவை வழியாக செல்லும் ரயில்களை செல்ல விடாமல் தடுத்து ரகளை செய்தனர்.

500க்கும் மேற்பட்டோர் நடத்திய இந்தப் போராட்டத்தால், சுமார் 4 மணி நேரம் ரயில் போக்குவரத்துபாதிக்கப்பட்டது.

போராட்டம் காரணமாக பாலக்காடு-திருவனந்தபுரம் அமிர்தா எக்ஸ்பிரஸ், மங்களாபுரம்-சென்னை ரயில்,பாலக்காடு-கொச்சி பாசஞ்சர் ஆகியவை நிறுத்தப்பட்டன.

ரயில்வே போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்ககளை சமாதானப்படுத்தி கலைந்து போகச் செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+