30 டிஎம்சி காவிரி நீர்: கேரளமும் அதிருப்தி

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்:தங்களுக்கு 30 டிஎம்சி காவிரி நீர் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதை ஏற்க முடியாது என கேரளம் கூறியுள்ளது.

இது குறித்து கேரள நீர்பாசனத் துறை அமைச்சர் பிரேமசந்திரன் கூறுகையில்,

காவிரியில் கேரளாவின் பங்கு 147 டிஎம்சி, ஆனால் 99 டிஎம்சி தண்ணீர் தான் கேட்டிருந்தோம். நடுவர் மன்றமோ 30 டிஎம்சி நீர் மட்டுமே வழங்கஉத்திரவிட்டுள்ளது. இதனால் கேரளாவிற்கு எந்த பிரயோஜனமும் இல்லை. இதனால் கபினி, பாம்பாறு, காராபுழை உள்பட 22 திட்டங்கள் செயல்இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே இது பற்றி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதா அல்லது நடுவர் மன்றத்தில் மேல்முறையீடு செய்வதா என்பது குறித்து சட்டநிபுணர்களுடன் ஆலோசனை நடத்தப்படும் என்றார்.

கேரளா காங்கிரஸ் கட்சித் தலைவரான உம்மன் சண்டி கூறுகையில், நடுவர் மன்ற தீர்ப்பு ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. வேண்டிய தண்ணீர் கூடகிடைக்கவில்லை என்றார்.

உண்மையில் சொன்னால் கேரளத்தில் 30 டிஎம்சியை பயன்படுத்தக் கூட விளை நிலங்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 30 டிஎம்சியில்பெரும்பாலான நீர் அரபிக் கடலையே போய்ச் சேர உள்ளது என்கின்றனர் நிபுணர்கள்.

முல்லைப் பெரியாறு அணையில் கூட கேரளம் கூடுதல் நீரைத் தேக்கி வைக்க மறுத்து அதை கடலுக்கு திருப்பி விட்டு வருவது நினைவுகூறத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+