மைசூர்-சென்னை சதாப்தி ரயிலை வழிமறித்துபயணிகள் மீது கன்னட விவசாயிகள் தாக்குதல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:மைசூலிருந்து சென்னை வந்த சதாப்தி ரயிலை 3 இடங்களில் வழி மறித்த கர்நாடக விவசாயிகள், ரயில் பயணிகள் மீதும், ரயில் என்ஜினின் டிரைவர்மற்றும் ஊழியர்களை தாக்கினர்.
காவி> நடுவர் மன்ற தீர்ப்பை எதிர்த்து மைசூர், மாண்டியா உள்ளிட்ட காவிரிப் பாசனப் பகுதிகளில் தொடர்ந்து விவசாயிகள் போராட்டம் நடத்திவருகின்றனர்.
இந் நிலையில் நேற்று பிற்பகல் மைசூரிலிருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலை மாண்டியா மாவட்டத்தில் 3இடங்களில் கர்நாடக விவசாயிகள் மறித்தனர்.
பின்னர் ரயில் டிரைவர், ஊழியர்கள் மற்றும் பயணிகள் மீது சரமாரியாகத் தாக்குதல் நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ரயில்வே போலீஸார்தலையிட்டு தாக்குதல் நடத்தியவர்களை கலைந்து போகச் செய்தனர்.












Click it and Unblock the Notifications