முன்னாள் டிஜிபி பொன் பரமகுரு மரணம்
சென்னை:முன்னாள் டிஜிபியும், இலக்கியவாதியுமான பொன் பரமகுரு சென்னையில் மரணமடைந்தார். அவருக்கு வயது 83.
தமிழக டிஜிபியாக இருந்தவர் பொன். பரமகுரு. ஓய்வுக்குப் பின்னர் சென்னை தி.நகரில் உள்ள தனது வீட்டில் வசித்து வந்தார். நேற்று காலைதிருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். மாலையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.
மறைந்த பொன் பரமகுரு நெல்லை மாவட்டம் கரிவலம் வந்தநல்லூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். அவருக்கு கமலா என்ற மனைவியும், 2மகன்கள், 2 மகள்கள் உள்ளனர்.
1948ம் ஆண்டு காவல்துறைப் பணியில் சேர்ந்தவர் பொன். பரமகுரு. தமிழகம் தவிர புதுவை ஐஜியாகவும் இவர் பணியாற்றியுள்ளார். 2 முறைகுடியரசுத் தலைவருக்கான பதக்கத்தைப் பெற்றுள்ளார்.
காவல்துறை அதிகாரியாக மட்டும் விளங்காமல் சிறந்த எழுத்தாளராகவும் விளங்கினார். இலக்கிய மாமணி என்ற பட்டத்தையும் பெற்றவர். 50க்கும்மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். பவுர்னமி அலைகள் என்ற படத்தில் நீதிபதியாக நடித்துள்ளார்.
காவல்துறைப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும் பணியாற்றினார்.












Click it and Unblock the Notifications