பந்த், பேரணி: கர்நாடக அரசுக்கு நோட்டீஸ்
பெங்களூரூ:கர்நாடகத்தில் பந்த், ஊர்வலங்கள் உள்ளிட்ட போராட்டங்களை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், கர்நாடக அரசுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம்நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பிரபல கன்னட எழுத்தாளர் டாக்டர் மருளசித்தப்பா, பத்திரிக்கையாளர் சூத்ர ஸ்ரீனிவாஸ், ஜன ஸபந்தன சேவா சமஸ்தி ஆகியோர் இது தொடர்பாகபொது நலன் மனுவைத் தாக்கல் செய்திருந்தனர்.
அந்த மனுவில், பந்த், ஊர்வலங்கள் உள்ளிட்டவற்றை நடத்துவோர், அந்தப் போராட்டங்களின்போது அரசு மற்றும் தனியார் சொத்துக்களுக்குசேதம் ஏற்பட்டால், அவர்கள் அதற்குரிய இழப்பீட்டை வழங்க உத்தரவிட வேண்டும்.
மேலும் பொது அமைதி மற்றும் மத ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும் வகையில் போராட்டங்கள் நடத்தப்படக் கூடாது என்று உத்தரவிட வேண்டும்.இதற்காக விதிமுறைகள் கடுமையாக்கப்பட வேண்டும்.
ஜனவரி 22ம் தேதி பெங்களூரில் நடந்த வகுப்பு மோதலின்போது உயிரிழந்த 12 வயது சிறுவனின் குடும்பத்திற்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் அரசு இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தனர்.
இந்த மனுவில் கர்நாடகத்தின் முக்கிய கட்சிகள் அனைத்தையும் அவர்கள் பிரதிவாதிகளாக சேர்த்துள்ளனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சிரியாக் ஜோசப், பி.எஸ்.பாட்டீல் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு கூறிஅரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை எதிர்த்து வருகிற 12ம் தேதி பல்வேறு கன்னட அமைப்புகள் பந்த் நடத்த அழைப்பு விடுத்துள்ளன. இந்த முழுஅடைப்பின்போது வன்முறை வெடிக்கக் கூடும் என்ற அச்சம் தமிழர்கள் மத்தியில் நிலவுகிறது. இந்த நிலையில் இந்த பொது நலன் மனுமுக்கியத்துவம் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications