சமயபுரம் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது
திருச்சி:திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் இன்று காலை புதிய தங்க விமானத்துக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
மாரியம்மன் கோயிலில் உள்ள கற்பக விமானம் 74 கிலோ சுத்த தங்கத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் கோயில் பரிவார விமானங்கள், ராஜகோபுரங்கள், மண்டபங்கள் ஆகியவற்றை புதுப்பிக்கப்பட்டு, புதிய பஞ்சவர்ண திருப்பணிகளும் செய்து முடிக்கப்பட்டன.
இதையடுத்து கடந்த 6ம் தேதி முதல் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. இன்று காலை பாவனாபிஷேகம், காலசந்தி பூஜை நடைபெற்றன.
தொடர்ந்து பிம்பசுத்தி, ரக்ட்ஷா பந்தனம், நாபி சந்தானம், ஸ்பரிசாஹூதி ஆகியவை நடத்தப்பட்டன. பின்னர் மூலிகை திரவியங்கள், பழங்கள்,பட்சணங்களினால் மூலமந்திர ஹோமம் நடந்தது.
காலை 7மணி முதல் 8 மணி வரை புதிய தங்க விமானம் உள்ளிட்ட பரிவார மூர்த்திகள் விமானங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம்நடந்தது.
இந்த நிகழ்ச்சியையொட்டி சமயபுரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications