ரூ. 35 லட்சம் கடத்தல் வைரம் பறிமுதல்
சென்னை:சென்னையிலிருந்து தாய்லாந்துக்கு ரூ. 35 லட்சம் மதிப்புள்ள வைரக் கற்களை கடத்த முயன்ற நபரை போலீஸார் பிடித்தனர்.
சென்னையிலிருந்து பாங்காக் செல்லும் விமானத்தில் ஒருவர் வைரக் கற்களை கடத்திச் செல்வதாக சுங்க துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து சுங்கத் துறை அதிகாரிகள் பாங்காக் செல்லவிருந்த தாய் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணிக்கவிருந்த ஒரு நபரைப் பிடித்துவிசாரித்தனர்.
அவரது சூட்கேஸ் சோதனை போடப்பட்டது. அப்போது அதில் துணிகளைத் தவிர வேறு எதுவும் இல்லை. ஆனாலும் சந்தேகம் நீங்காதஅதிகாரிகள், சூட்கேஸை மீண்டும் சோதனையிட்டனர். அப்போது சூட்கேஸில் ஒரு சிறிய அறை ஒன்று இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அதைத் திறந்து பார்த்தபோது அதற்குள் 15 பொட்டலங்கள் இருந்தன. அவற்றைப் பிரித்துப்பார்த்தபோது அத்தனையும் வைரக்கற்கள். பளபளவென ஜொலித்த அந்த வைரக் கற்களின் மதிப்பு ரூ. 35 லட்சம் ஆகும்.
அந்த வைரக் கற்களைப் பறி.தல் செய்த சசுங்க்த துறை அதிகாரிகள் அவற்றைக் கடத்திய ஷேக் மொஹைதீனையும் பிடித்தனர். அவர் சென்னைராயபுரத்தைச் சேர் ந்தவர் என்பது விசாரணையில் தெரிய வந்தது.
சென்னையில் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்குப் பின்னர் கடத்தல் வைரம் பிடிபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications