சென்னை சர்ச்சில் இத்தாலி பிரதமர் பிரார்த்தனை
Subscribe to Oneindia Tamil
சென்னை:சென்னை பரங்கிமலை மலை மீதுள்ள புனித தோமையர் பேராலயத்தில் இத்தாலி பிரதமர் ரொமனோ புரோடி மற்றும் அவரது மனைவி ஆகியோர்இன்று பிரார்த்தனை செய்தனர்.
இத்தாலி பிரதமர் புரோடி தனது மனைவியுடன் சென்னை வந்துள்ளார். சென்னை பல்கலைக்கழக விழாவில் பங்கேற்க வந்துள்ள புரோடி, இன்றுகாலை பரங்கிமலை மீதுள்ள புகழ் பெற்ற புனித தோமையர் பேராலயத்திற்குச் சென்றார். அவருடன் மனைவி பிளேவியா பிரான்ஸோனியும்சென்றார்.
இருவரும் இணைந்து பேராலயத்தில் நடந்த திருப்பலி வழிபாட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். சுமார் ஒரு மணி நேரம் இத்தாலி பிரதமரும்,அவரது மனைவியும் பிரார்த்தனையில் பங்கேற்றனர்.
இத்தாலி பிரதமரைக் கெளரவிக்கும் வகையில் சிறப்பு நடன நிகழ்ச்சிக்கும் பேராலய நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. பின்னர் சாந்தோமில் உள்ளபுனித தோமையர் பேராலயத்திலும், இத்தாலி பிரதமர் தம்பதி வழிபட்டது.












Click it and Unblock the Notifications