பஸ்-லாரி மோதலில் 2 பேர் பலி: 39 காயம்

Subscribe to Oneindia Tamil

பெரம்பலூர்:திருவண்ணாமலை அரசு கல்லூரி மாணவர்கள் சுற்றுலா சென்ற பஸ்சும் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் ஒரு மாணவன் உள்பட2 பேர் உயிரிழந்தனர். மேலும் 39 பேர் காயமடைந்தனர்.

திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் சுற்றுலா சென்ற பஸ் இன்று காலை பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அருகே வந்த போதுஎதிரே வந்த லாரி மீது நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் லாரி டிரைவர் ராஜேந்திரன் (28), கல்லூரி மாணவர் சக்தி (21) ஆகியோர் சம்பவஇடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் 39 பேர் படுகாயம் அடைந்தனர். இவர் அனைவரும் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 10பேரின் நிலைமை கவலைகிடமாக உள்ளது.

இந்த சாலை விபத்தினால் திருச்சி-சென்னை தேசிய நெடுங்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+