மது அவை தலைவரா-அதிமுக நிர்வாகி ராஜினாமா
Subscribe to Oneindia Tamil
சென்னை:அதிமுக அவைத் தலைவராக முன்னாள் அமைச்சர் மதுசூதனன் தேர்ந்தெடுக்கப்பட்டதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று கூறி எம்ஜிஆர்இளைஞர் அணி மாநில இணைச் செயலாளர் ஆனந்தன் அதிமுகவிலிருந்து ராஜினாமா செய்துள்ளார்.
அதிமுக அவைத் தலைவராக சமீபத்தில் மதுசூதனன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த நிலையில் எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாநில இணைச் செயலாளராக இருக்கும் ஆனந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நாவலர் நெடுஞ்செழியன், புலவர் புலமைப்பித்தன், காளிமுத்து ஆகிய கற்றறிந்த பெரியவர்கள் வகித்து வந்த அவைத் தலைவர் பதவிக்குமதுசூதனன் போய் தேர்வு செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சி தருகிறது. எனவே எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாநில இணைச் செயலாளர்பொறுப்பிலிருந்து விலகிக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications