தமிழகத்துக்கு உலக வங்கி ரூ2547 கோடி கடன்!
டெல்லி:தமிழக நீர்ப்பாசன கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டப் பணிகளுக்காக உலக வங்கி ரூ. 2,547 கோடி கடன் உதவியை வழங்குகிறது. இதுதொடர்பானஒப்பந்தம் டெல்லியில் கையெழுத்தானது.
டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன், மத்திய நிதித்துறை இணைசெயலாளர் மதுசூதனன் , தமிழக பொதுப்பணித்துறை செயலாளர் ராஜரத்தினம் மற்றும் உலக வங்கியின் தெற்கு ஆசிய துணை தலைவர் பிரபுல்படேல் ஆகியோர் முன்னிலையில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.
தமிழகம் முழுவதும் 63 துணை நதி படுகைகளில் உள்ள 6 லட்சம் ஹெக்டேர் நிலத்தில், பாசனத் திட்டங்களை நவீன மயமாக்க இந்த நிதிபயன்படுத்தப்படும்.
இதன் மூலம் விவசாயம், தோட்டக்கலை, மீன் வளத்துறை மற்றும் ஆராய்ச்சி போன்றவைகளும் ஊக்குவிக்கப்படும். தமிழகத்தில் 62 லட்சம் மக்கள்ஆற்று படுகைகளில் வாழ்கிறார்கள்.
ரூ. 2,547 கோடி கடன் தொகையில், நீர் வளத்தை ஒருங்கிணைத்து வலுப்படுத்தவும், அடிப்படை வசதிகளை பெருக்கவும் ரூ. 1,500 கோடியும்,
63 துணைப் படுகைகளில் தொழில் நுட்பத்தை அறி.கப்படுத்துதல் மற்றும் கம்ப்யூட்டர்மயமாக்கல் பணிக்காக ரூ. 250 கோடியும்,
மகசூலை பெருக்க உதவும் தரமான புதிய விதைகளுக்காக ரூ. 190 கோடியும், தோட்டக் கலைக்காக ரூ. 75 கோடியும், விவசாய கிடங்குகள் அமைக்கரூ. 25 கோடியும், சொட்டு நீர் பாசனத்திற்காக ரூ. 350 கோடியும் மற்றும் மீன் வளர்ச்சிக்காக ரூ. 60 கோடியும் ஒதுக்கப்படும்.
நிகழ்ச்சியில், ப.சிதம்பரம் பேசுகையில், தமிழகத்தில் நதி நீர்தான் விவசாயத்தின் முதுகெலும்பாக இருக்கிறது என்றார்.
பொதுப் பணித்துறை அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், தமிழ்நாட்டில் தான் முதல்முறையாக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. உலகவங்கியின் உதவியுடன் தமிழகத்தில் நீர் நில சீரமைப்பு, புணரமைப்பு பணிகள் செய்யப்படும். இதனால் மூலம் நீர்பாசனம் அபிவிருத்தி அடைவதுடன்மக்களுக்கு கூடுதல் வருமானமும் கிடைக்கும் என்றார்.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications