தமிழகத்துக்கு உலக வங்கி ரூ2547 கோடி கடன்!
டெல்லி:தமிழக நீர்ப்பாசன கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டப் பணிகளுக்காக உலக வங்கி ரூ. 2,547 கோடி கடன் உதவியை வழங்குகிறது. இதுதொடர்பானஒப்பந்தம் டெல்லியில் கையெழுத்தானது.
டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன், மத்திய நிதித்துறை இணைசெயலாளர் மதுசூதனன் , தமிழக பொதுப்பணித்துறை செயலாளர் ராஜரத்தினம் மற்றும் உலக வங்கியின் தெற்கு ஆசிய துணை தலைவர் பிரபுல்படேல் ஆகியோர் முன்னிலையில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.
தமிழகம் முழுவதும் 63 துணை நதி படுகைகளில் உள்ள 6 லட்சம் ஹெக்டேர் நிலத்தில், பாசனத் திட்டங்களை நவீன மயமாக்க இந்த நிதிபயன்படுத்தப்படும்.
இதன் மூலம் விவசாயம், தோட்டக்கலை, மீன் வளத்துறை மற்றும் ஆராய்ச்சி போன்றவைகளும் ஊக்குவிக்கப்படும். தமிழகத்தில் 62 லட்சம் மக்கள்ஆற்று படுகைகளில் வாழ்கிறார்கள்.
ரூ. 2,547 கோடி கடன் தொகையில், நீர் வளத்தை ஒருங்கிணைத்து வலுப்படுத்தவும், அடிப்படை வசதிகளை பெருக்கவும் ரூ. 1,500 கோடியும்,
63 துணைப் படுகைகளில் தொழில் நுட்பத்தை அறி.கப்படுத்துதல் மற்றும் கம்ப்யூட்டர்மயமாக்கல் பணிக்காக ரூ. 250 கோடியும்,
மகசூலை பெருக்க உதவும் தரமான புதிய விதைகளுக்காக ரூ. 190 கோடியும், தோட்டக் கலைக்காக ரூ. 75 கோடியும், விவசாய கிடங்குகள் அமைக்கரூ. 25 கோடியும், சொட்டு நீர் பாசனத்திற்காக ரூ. 350 கோடியும் மற்றும் மீன் வளர்ச்சிக்காக ரூ. 60 கோடியும் ஒதுக்கப்படும்.
நிகழ்ச்சியில், ப.சிதம்பரம் பேசுகையில், தமிழகத்தில் நதி நீர்தான் விவசாயத்தின் முதுகெலும்பாக இருக்கிறது என்றார்.
பொதுப் பணித்துறை அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், தமிழ்நாட்டில் தான் முதல்முறையாக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. உலகவங்கியின் உதவியுடன் தமிழகத்தில் நீர் நில சீரமைப்பு, புணரமைப்பு பணிகள் செய்யப்படும். இதனால் மூலம் நீர்பாசனம் அபிவிருத்தி அடைவதுடன்மக்களுக்கு கூடுதல் வருமானமும் கிடைக்கும் என்றார்.












Click it and Unblock the Notifications