பெங்களூரில் கன்னட நடிகர், நடிகையர் பேரணி-அம்பரீஷ், சரோஜா தேவி மிஸ்ஸிங்
பெங்களூரு:காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூரில் கன்னட நடிகர், நடிகையர் உள்ளிட்ட திரையுலகினர் இன்று பேரணி நடத்தினர்.
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை எதிர்த்து கன்னடத் திரையுலகினர் இன்று பிரமாண்டப் பேரணி நடத்தப்படும் என அறிவித்திருந்தனர்.இன்று காலை மகாத்மா காந்தி சாலையில் உள்ள காந்தி சிலை அருகே நடிகர், நடிகையர் திரண்டனர். பின்னர் நடிகர் விஷ்ணுவர்த்தன் தலைமையில்பேரணி தொடங்கியது.
மறைந்த ராஜ்குமாரின் மகன்கள் சிவராஜ் குமார், ராகவேந்திரா ராஜ்குமார், புனீத் குமார், ரமேஷ் அரவிந்த், தர்ஷன், நடிகைகள் ஜெயமாலா,ஜெயந்தி, தாரா, ரக்ஷிதா உள்ளிட்ட ஆயிரக்கணக்கான நடிகர், நடிகையர் கலந்து கொண்டனர்.
ஊர்வலத்திற்குத் தலைமை தாங்குவதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த நடிகை சரோஜா தேவி காலில் ஏற்பட்ட காயம் காரணமாக வரவில்லை என்றுதெரிவிக்கப்பட்டது.
அதே போல இந்தப் பேரணியில் மத்திய அமைச்சரும், நடிகருமான அம்பரீஷ் கலந்து கொள்ளவில்லை. மாண்டியா மாவட்ட விவசாயிகளின்பிரதிநிதியே நான் தான் என்று மார்தட்டி வரும் அம்பரீஷ் அதில் ஆப்சென்ட் ஆனது புருவங்களை உயரச் செய்துள்ளது.
ஊர்வலம் பின்னர் ஆளுநர் மாளிகையுடன் முடிவடைந்தது. இதையடுத்து விஷ்ணுவர்த்தன் உள்ளிட்ட சில பிரதிநிதிகள் ஆளுநர்டி.என்.சதுர்வேதியை சந்தித்து கோரிக்கை மனுவைக் கொடுத்தனர்.
பிறகு செய்தியாளர்களிடம் விஷ்ணுவர்த்தன் பேசுகையில், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு கர்நாடகத்திற்கு ஏற்புடையது அல்ல, அநீதியான தீர்ப்பு.இதில் மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி ஆளுநரிடம் மனு கொடுத்துள்ளோம் என்றார்.
நடிகர், நடிகையரின் பேரணியையொட்டி ஊர்வலம் செல்லும் பாதை நெடுகிலும் போலீஸார் அதிக அளவில் குவிக்கப்பட்டு பாதுகாப்புகொடுத்திருந்தனர்.












Click it and Unblock the Notifications