ஆகாயத்தைத் தொடும், ஆடு, கோழிக் கறி விலை
சென்னை:சென்னையில், ஆடு, கோழிக் கறியின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் ஆடு மற்றும் கோழிக் கறி பெரும்பாலானவர்களால் விரும்பிச் சாப்பிடப்படுகிறது. எப்போதுமே ஆட்டுக் கறியின் விலைதான் அதிகம்இருக்கும். சென்னையில் ஆட்டுக் கறி விலை கிலோ ஒன்றுக்கு ரூ. 200 முதல் 220 ரூபாய் வரை உள்ளது.
ஆனால் தற்போது கோழிக்கறி விலை ஆட்டுக் கறி அளவுக்கு விலை உயர்ந்து வருகிறது. சென்னையில் ஒரு கிலோ கோழிக்கறி விலை 60 முதல் 65ரூபாய் வரை இருந்தது. ஆனால் தற்போது 110 ரூபாய் வரைக்கும் உயர்ந்துள்ளது.
மொத்த மார்க்கெட்டில் 96 ரூபாய் அளவுக்கு கோழிக்கறி விலை இருந்தது. புறநகர்ப் பகுதிகளில் 100 முதல் 110 ரூபாய் வரை விலை காணப்பட்டது.இதனால் கோழிக் கறி சாப்பிடும் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கோழித் தீவனங்களின் விலை உயர்வே இந்த திடீர் கறி விலை உயர்வுக்குக் காரணமாம். மக்காச் சோளம், சோயா ஆகிய கறிக் காழி தீவனத்தின்விலை கடுமையாக உள்ளது. இதனால் உற்பத்தியைக் குறைத்து விட்டனர். இதனால்தான் கோழிக்கறியின் விலையும் உயர்ந்துள்ளதாம். இதேபோலமுட்டையின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications