காவிரி: பிரதமரை சந்திக்கிறார் குமாரசாமி
பெங்களூரு:காவிரி பிரச்சினை தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேச கர்நாடக முதல்வர் குமாரசாமி முடிவு செய்துள்ளார்.
பெங்களூருவில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், பிரதமரை சந்திக்க முடிவு செய்துள்ளேன். இதற்காக நேரம் கேட்டுள்ளேன்.தேவைப்பட்டால் அனைத்துக் கட்சிக் குழுவையும் உடன் அழைத்துச் செல்வேன்.
பிப்ரவரி 22ம் தேதி அனைத்துக் கட்சி எம்.பிக்கள் கூட்டம் கூட்டப்படும். காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு தொடர்பாக அப்போது விவாதிக்கப்படும்.
அதேபோல இன்னும் சில நாட்களில் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்படும். நடுவர் மன்றத் தீர்ப்பின் நகல் அனைத்துக் கட்சிகளுக்கும்கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில், மத்திய அரசின் தலையீட்டைக் கோருவது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. பிரச்சிசனையின் முக்கியத்துவம் மற்றும் ஆழம்கருதி, மத்திய அரசு இந்தப் பிரச்சினையில் தலையிட வேண்டும் என்ற கருத்து வலுத்து வருகிறது என்றார் குமாரசாமி.












Click it and Unblock the Notifications