துரைமுருகனிடம் சட்டம்-வேலுவிடம் கூட்டுறவு:கோ.சி மணி முக்கியத்துவம் குறைப்பு
சென்னை:திமுக அமைச்சரவையில் உள்ள ஐந்து அமைச்சர்களின் இலாகாக்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, வேலு ஆகியோருக்கு கூடுதல் இலாகாக்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
கோ.சி.மணி வகித்து வந்த கூட்டுறவுத் துறை அ.வ.வேலுவிடம் தரப்பட்டுள்ளது. பொன்முடியிடம் இருந்த முன்னாள் ராணுவத்தினர் நலன் மணியிடம்தரப்பட்டுள்ளது. ஏற்கனவே இருந்த புள்ளியியல் துறையும் மணியிடமே இருக்கும்.
கடந்த திமுக ஆட்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சராக முக்கிய பொறுப்பில் இருந்த மணிக்கு இந்த முறை கூட்டுறவுத் துறை தான் வழங்கப்பட்டது.இப்போது அதுவும் பறிக்கப்பட்டு உப்பு சப்பில்லாத துறைகளான முன்னாள் ராணுவத்தினர் நலன், புள்ளியியல் துறை ஆகியவை தரப்பட்டுள்ளன.இதன் மூலம் கோ.சி. மணியின் முக்கியத்துவம் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் உணவுத்துறை அமைச்சராக இருந்த அ.வ.வேலுவிடம் கூட்டுறவுத் துறையும் சேர்த்து கொடுக்கப்பட்டு அவரது முக்கியத்துவம்அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதே போல பொதுப் பணித்துறை அமைச்சராக உள்ள துரைமுருகனிடம் கூடுதலாக சட்டத்துறையும் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை அந்தத் துறைஐ.பெரியசாமியிடம் இருந்தது. இனிமேல் ஐ.பெரியசாமி வருவாய் மற்றும் சிறைத் துறைகளை மட்டும் கவனிப்பார்.
உயர் கல்வி அமைச்சராக உள்ள பொன்முடியிடம், முதல்வரிடமிருந்த சுரங்கம் மற்றும் கனிமவளத் துறை வழங்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications