அரசு பொருட்காட்சியில் ஆபாச சி.டி விற்பனை!
சென்னை:சென்னையில் நடந்து வரும் அரசு சுற்றுலா பொருட்காட்சியில் ஆபாச திருட்டு சி.டி.க்களை விற்பனை செய்த 4பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ. 20 லட்சம் மதிப்புள்ள சிடிக்களைப் பறிமுதல்செய்யப்பட்டன.
சென்னை கடற்கரை தீவுத் திடலில் ஆண்டுதோறும் சுற்றுலாப் பொருட்காட்சி நடைபெறும். தற்போது நடந்துவரும் பொருட்காட்சியில், புதிய திரைப்படங்களின் திருட்டு விசிடிக்கள் மற்றும் ஆபாச சிடிக்கள் விற்பனைசெய்யப்பட்டு வருவதாக போலீஸாருக்கு தெரிய வந்தது.
இதையடுத்து காவல்துறை ஆணையர் லத்திகா சரண் உத்தரவின் பேரில், போலீஸார் அதிரடி சோதனையில்இறங்கினர். இதில், ரூ. 20 லட்சம் மதிப்புள்ள 2,500 திருட்டு வி.சி.டிகள் சிக்கின.
இதில் நடிகைகளின் ஆபாச சி.டிக்களும் இருந்தன. கிராபிக்ஸ் முறையில் தயாரிக்கப்பட்ட ஆபாச சி.டிக்களும்கிடைத்தன.
திருட்டு விசிடியை விற்றதாக அசன் குத்தூஸ் (24), கணேசன் (27), ஆனந்த் (22), சாகுல்ஹமீது (42) ஆகிய 4பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, ஒவ்வொரு ஆண்டும் பொருட்காட்சியில் இது போல ரகசியமாகவிற்று வருவதாகவும், அதற்காக ரூ.30 ஆயிரம் கொடுத்து கடை எடுத்து நடத்தி வந்ததும் தெ>ய வந்தது.
ஒவ்வொரு சிடியையும் 100 ரூபாய் வரை விலை வைத்து விற்று வந்துள்ளனர்.
அரசுப் பொருட்காட்சி வரலாற்றிலேயே, திருட்டு விசிடிக்கள், ஆபாச சி.டிக்கள் விற்பனை செய்யப்படுவதைகண்டுபிடிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்.












Click it and Unblock the Notifications