கருணாநிதியின் போக்கு: ராமதாஸ் அதிருப்தி
விழுப்புரம்:காவரிப் பிரச்சினை, முல்லைப் பெ>யாறு அணை உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளில் தமிழக முதல்வர் கருணாநிதியின் நிலை ஆச்சர்யம் அளிக்கிறது.இதுபோன்ற முக்கிய பிரச்சினைகளில் முடிவு எடுக்கும் முன் கூட்டணிக் கட்சிகளுடன் ஆலோசிக்கத் தவறக் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ்கூறியுள்ளார்.
திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரத்தில் தனது இல்லத்தில் செய்தியாளர்களிடம் ராமதாஸ் பேசுகையில்,
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பில் தமிழகத்திற்குச் சாதகமான அம்சங்களும் இருக்கின்றன, பாதகமும் இருப்பதாக முதலில் கருணாநிதி கூறினார்.ஆனால் இப்போது தீர்ப்பை ஏற்க வேண்டும் என்கிறார்.
அதேபோல முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையில், நீதிமன்றத்திற்கு வெளியே இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முயற்சிக்க வேண்டும் என்றுகூறினார். ஆனால் இனிமேல் கேரள அரசுடன் பேச்சுவார்த்தையே கிடையாது என்று பின்னர் தெரிவித்தார்.
கருணாநிதியின் நிலையில் ஏன் இந்த மாற்றம் என்பது புரியவில்லை. மேலும் தமிழக அரசின் நிலைக்கும், திமுகவின் நிலைக்கும் வேறுபாடுகள்காணப்படுகின்றன. இதுபோன்ற முக்கிய பிரச்சினைகளில் முடிவுகள் எடுக்கும் முன் கூட்டணிக் கட்சிகளுடன் கலந்து ஆலோசிக்க வேண்டும்.
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின் அம்சங்கள் குறித்து மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். எனவே அதன் நகலை அனைத்துக் கட்சித்தலைவர்களுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கர்நாடகத்தில் எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், விவசாய சங்கத் தலைவர்களுக்கு தீர்ப்பின் நகலை அம்மாநில அரசு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பக்லிகர் அணைப் பிரச்சினையில் இந்தியாவும், பாகிஸ்தானும் உலக வங்கி நிபுணர்களின் தீர்ப்பை ஏற்றுக் கொண்டுள்ளன. அப்படி இருக்கையில்,ஒரே நாட்டில் உள்ள தமிழகமும், கர்நாடகமும் முரண்பாடாக செயல்படுவது வேதனைக்குரியது.
அண்டை மாநிலங்களுடன் சகோதர பாசத்துடன் பழகுவோம் என்று பேசிக் கொண்டிருப்பதில் எந்தப் பயனும் இல்லை. நமது உரிமைகளைப் பெறஅரசியல் ரீதியாகவோ அல்லது சட்டரீதியாகவோ நாம் போராட வேண்டும்.
ஆளுநர் மாளிகையில் உள்ள ஒரு தனி நபர், பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளார். இது அரசுக்கு நல்லதல்ல. இதுகுறித்து முதல்வர்கருணாநிதிக்கு நான் கடிதம் எழுதியுள்ளேன். அவர் உரிய நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறேன் என்றார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications