திருவையாறு நிர்வாண பூஜை சாமியார் எஸ்கேப்!
திருவையாறு:தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே நிர்வாண பூஜை நடத்தி பல்வேறு சில்மிஷங்கள், முறைகேடுகளில் ஈடுபட்ட சாமியார் மீது போலீஸில் புகார்கொடுக்கப்பட்டதால் அவர் தலைமறைவாகி விட்டார்.
திருவையாறு அருகே தில்லை ஸ்தானம் என்ற கிராமத்தில், பஞ்சநாதீஸ்வரர் தர்மாம்பிகை குருகுல ஆசிரமம் உள்ளது. இதன் தலைமை நிர்வாகியாகஇருந்தவர் கோவையைச் சேர்ந்த டாக்டர் செல்வக்குமார் சுவாமிகள்.
இவ>டம் ரவீந்திர சாமி, திருமலைராஜன், ஆறுமுக சாமி ஆகியோர் சிஷ்யர்களாக இருந்து வந்தனர். சமீபத்தில் இந்த ஆசிரமம் குறித்து பல்வேறுசர்ச்சைகள் எழுந்தன.
நள்ளிரவுக்கு மேல் யாகம் வளர்த்த பில்லி சூனியம் வைக்கிறார்கள், கணவன், மனைவியை பிரித்து வைத்தல், புத்திர பாக்கிய பூஜை, சித்துவிளையாட்டு, நிர்வாண பூஜை என பல்வேறு பரபரப்புப் புகார்கள் எழுந்தன.
இதில் பெண்கள் கலந்து கொள்ளும் நிர்வாண பூஜைதான் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. அப்பாவி இளம் பெண்கள் இதில் கலந்துகொள்கின்றனராம். அவர்களை பூஜை முடிந்த பிறகு நிர்வாண நிலையிலேயே ஆசிரமத்தில் தங்க வைக்கிறார்களாம்.
இளம்பெண்கள் மட்டுமல்லாது சாமியாரும், அவரது சீடர்களும் கூட அரை நிர்வாண நிலையில் இருப்பார்களாம். பலத்த சப்தத்துடன் பயங்கரமாகஆடுவார்களாம்.
இதுகுறித்து சிதம்பரம் என்பவர் போலீஸில் புகார் கொடுத்தார். அதில் ஆசிரமத்தில் பல்வேறு செக்ஸ் முறைகேடுகள், அக்கிரமங்கள்நடைபெறுவதாகவும், போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கூறியிருந்தார்.
இதையடுதுத் திருவையாறு போலீஸார் ஆசிரமத்துக்கு வந்தனர். ஆனால் அங்கு செல்வக்குமார் சுவாமியும், அவரது சீடர்களும் இல்லை. தப்பிவிட்டனர்.
சாமியாரும், அவரது சீடர்களும் மைசூரில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. எனவே அவர்களைப் பிடிக்க தனிப்படை மைசூர்விரைந்துள்ளது.












Click it and Unblock the Notifications