படிப்பு-பிபிஏ: தொழில்-பைக் திருடி!
சென்னை:பிபிஏ படித்த பெண், மோட்டார் சைக்கிள் திருடியதாக கைது செய்யப்பட்டார். அவருடன் அவரது கும்பலையும் சேர்த்து போலீஸார்வளைத்துள்ளனர்.
சென்னை புறநகர்ப் பகுதிகளான செம்பியம், மாத்தூர், பெரவள்ளூர், கொடுங்கையூர் ஆகிய இடங்களில் அடிக்கடி மோட்டார் சைக்கிள்கள் திருடுபோய் வந்தன.
இதையடுத்து இணை ஆணையர் ரவி உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு திருடர்களைப் பிடிக்க வேட்டை முடுக்கி விடப்பட்டது.இந்த வேட்டையில் மோட்டார் சைக்கிள் திருடும் கும்பலை போலீஸார் வளைத்துப் பிடித்தனர்.
இந்தக் கும்பலில் சோபியா என்ற பெண்ணும் உள்ளார். இவர் தண்டையார்பேட்டையைச் சேர்ந்தவர். இவரது கணவர் குள்ள ராஜா. இவர் ஒருரெளடி.
சோபியா பிபிஏ வரை படித்துள்ளார். ஒரு மோட்டார் சைக்கிளை திருடிச் செல்லும்போது பைக்கும், களவுமாக பிடிபட்டார்.போலீஸாரால் கைது செய்யப்பட்ட கும்பலில், குள்ள ராஜா, பேரிங் ராஜா, சீமான், தரணி, ஜெயராஜ், சரவணன், ரமேஷ் கண்ணன் ஆகியோரும்அடங்குவர்.
இவர்களிடமிருந்து 8 பல்சர் பைக்குகள், 25 பவுன் நகைகள், டிவிடி பிளேயர், டிவி, கேமராக்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.












Click it and Unblock the Notifications