கண்ணிவெடி: அம்பாரையில் 12 பேர் காயம்
கொழும்பு:இலங்கையின் அம்பாரை பகுதியில் நடந்த கண்ணி வெடிகுண்டுத் தாக்குதலில் சிக்கி 12 அப்பாவி பொதுமக்கள் காயமடைந்தனர்.
நேற்று இரவு அம்பாரை மாவட்டத்திலிருந்து ஒரு வேனில் பொதுமக்கள் பலர் மத்திய கண்டி மாவட்டத்துக்குச் சென்று கொண்டிருந்தனர்.இவர்களில் பெரும்பாலானவர்கள் முஸ்லீம்கள்.
அப்போது அவர்கள் சென்ற வேன், கண்ணி வெடிகுண்டில் சிக்கி தூக்கி எறியப்பட்டது. இதில் 12 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்களில் 5 பேர்மஹா ஓயா மருத்துவமனையிலும், மற்றவர்கள் மஹியங்கானா மருத்துவமனைக்கும் அனுப்பப்பட்டனர். லேசான காயமடைந்த 7 பேர்சிகிச்சைக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
இங்கிலாந்து வெளியுறவு மற்றும் காமன்வெல்த் விவகார இணை அணைச்சர் டாக்ட் கிம் ஹோவல்ஸ் அம்பாரைக்கு வரவிருந்த சில மணி நேரம்முன் இந்த சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.
கிழக்கு அம்பாரை மாவட்டத்தில் ராணுவத் தாக்குதகலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறவும், அவர்களுக்குத்தேவையான நிவாரண நடவடிக்கைகளை ஆய்வு செய்யவும் ஹோவல்ஸ் இலங்கை வந்துள்ளார்.
முன்னதாக கொழும்பு வந்த ஹோவல்ஸ் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், விடுதலைப் புலிகளும், இலங்கை அரசும் போரைக் கைவிட்டுவிட்டு பேச்சுவார்த்தைக்குத் திரும்ப வேண்டும். விரைவில் இப்பிரச்சினையை முடிக்க முயல வேண்டும். இந்தப் போரில் யாருக்கும் வெற்றிகிடைக்காது என இரு தரப்பும் புரிந்து கொள்ள வேண்டும் என்றார் ஹோவல்ஸ்.












Click it and Unblock the Notifications