உபி சட்டசபைக்கு ஏப்ரல்-மே 7 கட்ட தேர்தல்
டெல்லிஒரு வழியாக உத்தரப் பிரதேச மாநில சட்டசபைத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏப்ரல் 7ம் தேதி தொடங்கி 7 கட்டமாக தேர்தல்நடைபெறுகிறது.
உ.பி. மாநில சட்டசபையின் ஆயுட்காலம் மே 14ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து அங்கு விரைவில் தேர்தல் நடத்த வேண்டும். ஆனால்அதற்குள் முலாயம் சிங் தலைமையிலான அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என காங்கிரஸ், பாஜக, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்திவநதன.
இந்த நிலையில், பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து முலாயம் சிங்கின் சமாஜ்வாடிக் கட்சியில் இணைந்த 17 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இந்தப் பின்னணியில், மாநில அரசியல், சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து ஆளுநர் ராஜேஷ்வர், மத்திய அரசிடம் அறிக்கை கொடுத்தார். இதனால்முலாயம் சிங் அரசு டிஸ்மிஸ் செய்யப்படக் கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் டிஸ்மிஸ் நடவடிக்கைக்கு இடது சாரிக் கட்சிகள் கடும்ஆட்சேபனை தெரிவித்தன.
இந்த நிலையில், தற்போது உ.பி. சட்டசபைக்கு தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையர் கோபாலசாமிஇதுதொடர்பாக செய்தியாளர்களிடம் கூறுகையில், ஏழு கட்டமாக தேர்தல் நடத்தப்படும். ஏப்ரல் 7ம் தேதி முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும்.
அடுத்து 13, 18, 23,28 மே 3, 8 ஆகிய நாட்களில் வாக்குப் பதிவு நடைபெறும். ஓட்டு எண்ணிக்கை மே 11ம் தேதி தொடங்கும்.
தேர்தலில் 11 கோடியே 43 லட்சம் பேர் வாக்களிக்கவுள்ளனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால் நடத்தை விதிமுறைகள் உடனடியாகஅமலுக்கு வருகின்றன.
இந்தத் தேர்தலோடு மிர்ஸாபூர், ராபர்ட்ஸ்கஞ்ச், பில்ஹூர் ஆகிய மக்களவைத் தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடைபெறும் என்றார்கோபாலசாமி.
7 கட்டமாக தேர்தல் நடத்தப்படுவதறகு முதல்வர் முலாயம்சிங் யாதவ் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், மத்திய அரசுக்கு வெளியிலிருந்து கொடுத்து வந்த ஆதரவை முலாயம் சிங கட்சி விலக்கிக் கொண்டுள்ளது. இக்கட்சிக்குலோக்சபாவில் 38 எம்.பிக்கள் உளளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இதனால் மத்திய அரசுக்கு எந்த ஆபத்தும் இல்லை.












Click it and Unblock the Notifications