இட்லி சாப்பிடும் போட்டியில் பலியான ஆசிரியர்!
கோவை:இட்லி சாப்பிடும் போட்டியில் 20 இட்லிகளை இடைவெளி விடாமல் சாப்பிட்ட ஆசிரியர் மூச்சுத் திணறி இறந்தார்.
சத்தியமங்கலத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் (29). இவர் கோவை அருகே குள்ள அன்னூரில் தனியார் கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் அக் கல்லூரியின் ஆண்டுவிழா நடந்தது. அதில் சாப்பாட்டு ராமன் போட்டியும் நடத்தப்பட்டது.
அதிக இட்லி சாப்பிடுவோருக்கு பரிசு என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து மாணவர்களும் ஆசிரியர்களும் போட்டி போட்டுக் கொண்டுஇட்லிகளை உண்டனர். ஸ்ரீதரும் போட்டியில் கலந்து கொண்டார். 20 இட்லிகளை படு வேகமாக சாப்பிட்ட அவர் 21வது இட்லியை சாப்பிட்டபோதுவிக்கல் ஏற்பட்டது.
இதையடுத்து வேக வேகமாக நீரைக் குடித்தார். அப்போது அவருக்கு நெஞ்சு வலியும் மூச்சுத் திணறலும் ஏற்பட்டு மயங்கினார்.
உடனடியாக அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், வழியிலேயே இறந்தார்.
இச் சம்பவம் குறித்து அவரது சகோதரி சிவராணி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications