காவிரி: டெல்லியில் தமிழக எம்பிக்களுடன் துரைமுருகன் ஆலோசனை
டெல்லி:காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு குறித்து தமிழக எம்.பிக்களுடன் பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று டெல்லியில் ஆலோசனைநடத்துகிறார்.
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த கர்நாடகம் முயன்று வருகிறது. மாஜி பிரதமர் தேவ கெளடா இதற்கானமுயற்சிகளில் இறங்கியுள்ளார்.
இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. முதல்வர் கருணாநிதி, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் இதற்குக்கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந் நிலையில், ஒருவேளை நாடாளுமன்றத்தில் விவாதம் நடந்தால் அதை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து விளக்க தமிழக எம்.பிக்களின்கூட்டத்தைக் கூட்டி ஆலோசனை வழங்குமாறு பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு கருணாநிதி உத்தரவிட்டார்.
இதையடுத்து துரைமுருகன் டெல்லி விரைந்தார். இன்று பிற்பகல் 12 மணிக்கு டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தமிழக நாடாளுமன்ற(ராஜ்யசபா, லோக்சபா) உறுப்பினர்களின் கூட்டம் நடக்கிறது.
அதில் காவிரி விவகாரத்தின் சட்ட, பாசன, கட்டமைப்பு நுணுக்கங்கள் குறித்து தமிழக எம்பிக்களுக்கு துரைமுருகன் விளக்குவார்.












Click it and Unblock the Notifications