சென்னையில் ஆஸ்திரேலிய துணை தூதரகம்!
சென்னை:சென்னையில் ஆஸ்திரேலிய துணைத் தூதரகம் திறக்கப்பட்டுள்ளது.
அண்ணா சாலையிலுள்ள ரஹேஜா டவர்ஸ் கட்டிடத்தில் இந்த துணைத் தூதரக அலுவலகம் இயங்கும். இதனை ஆஸ்திரேலிய நாட்டுவர்த்தகத்துறை அமைச்சர் வாரன் டிரஸ் திறந்து வைத்தார். அவர் பேசுகையில்,
கடந்த பத்து ஆண்டுகளாக ஆஸ்திரேலிய வர்த்தகத்தில் சென்னை முக்கிய பங்காற்றி வருகிறது. ஆஸ்திரேலியாவின் முக்கிய ஏற்றுமதி நாடாகஇந்தியா இருப்பதோடு, அங்குள்ள முக்கிய வங்கிகளுக்கும் இந்தியாவில் கிளைகள் உள்ளன.
ஆஸ்திரேலியாவின் ஏற்றுமதி நிதி மற்றும் காப்பீட்டு நிறுவனமும் இந்தியாவின் ஐசிஐசிஐ வங்கியும் இணைந்து வர்த்தகக் கடன் திட்டத்தைதுவக்கவுள்ளன என்றார்.
அப்போது பேசிய தமிழக கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, உலகமெங்குமிருந்து பல்வேறு துறைகளில் முதலீட்டை ஈர்ப்பதில் தமிழகம்முன்னிலை வகித்து வருகிறது. இந்த துணை தூதரகம் மூலம் ஆஸ்திரேலியா செல்வதற்கான விசா வழங்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications