சிறுமி மானபங்க கொலை: 62க்கு தூக்கு
திண்டுக்கல்:4 வயது சிறுமியை கற்பழித்துக் கொடூரமாக கொலை செய்த 62 வயது கூலித் தொழிலாளிக்கு திண்டுக்கல் நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்துத்தீர்ப்பளித்தது.
கொடைக்கானல் அருகே உள்ள செண்பகனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். இவருக்கு 4 வயதில் பிரியங்கா என்ற மகள் இருந்தாள். கடந்த2003ம் ஆண்டு நவம்பர் 25ம் தேதி வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த பிரியங்கா காணாமல் போனாள்.
முருகனும், அவரது மனைவியும் அக்கம் பக்கத்தில் தேடிப் பார்த்தனர். அப்போது பாத்திநாதன் (வயது 62) என்ற கூலித் தொழிலாளியின் வீட்டுக்குஅருகே உள்ள முட்புதரில் பிரியங்காவின் உடல் கிடந்தது.
இதையடுத்து கொடைக்கானல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் பாத்திநாதன்தான் பிரியங்காவை கற்பழித்துக்கொலை செய்தது தெ>ய வந்தது. விளையாடிக் கொண்டிருந்த அந்த சிறுமியை, வீட்டுக்குள் கூட்டிப் போய் பலவந்தமாக கற்பழித்துள்ளார் அந்தக்காமக் கொடூரன்.
பின்னர் பிரியங்காவை ஈவு இரக்கமின்றிக் கொலை செய்து முட்புதரில் வீசி விட்டார். இதையடுத்து பாத்திநாதனை கைது செய்யப்பட்டுதிண்டுக்கல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ரவீந்திரன், பாத்திநாதனுக்கு தூக்குத் தண்டனை விதித்துதீர்ப்பளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications