கிரீமி லேயரை நீக்க கூடாது: தமிழக அரசு
டெல்லி:பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டில் கிரீமி லேயரை நீக்கக் கூடாது என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
வாய்ஸ் என்ற பொது நல அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொது நல வழக்கில், தமிழகத்தில் உச்சநீதிமன்ற உத்தரவை மீறி 69% இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. கிரிமி லேயர் எனப்படும் பிற்படுத்தப்பட்டவர்களில் வசதி படைத்தவர்கள் இடஒதுக்கீட்டிலிருந்து நீக்கப்படவில்லை.இதை நீக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தது.
இதற்கு பதில் மனு தாக்கல் செய்ய, தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து தமிழக அரசு ரு பிரமாணப் பத்திரம் தாக்கல்செய்துள்ளது. அதில்,
தமிழ்நாட்டில் இடஒதுக்கீட்டை 50 சதவீதத்துக்கும் மேல் அதிகரிக்கும் சட்டம் 1980ம் ஆண்டே நிறைவேற்றப்பட்டுவிட்டது. அரசு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு அளிக்கும்போது கிரீமி லேயரை நீக்க வேண்டும் என்கிறார்கள்.
கிரீமி லேயரை கண்டறிவது மிகவும் கடினம். இடஒதுக்கீட்டில் கிரீமி லேயரை கண்டு பிடித்து நீக்கவில்லை என தமிழக அரசு மீதுள்ள குற்றச்சாட்டில்ஆதாரங்கள் புள்ளி விவரங்கள் இல்லை. அப்படி செய்வதால் உண்மையில் சலுகை தேவைப்படுகிறவர்கள் பாதிக்கப்படுவார்கள் எனகூறப்பட்டுள்ளது.
இதையடுத்து தமிழக அரசின் பிரமாணப் பத்திரத்துக்கு பதில் தாக்கல் செய்யுமாறு வாய்ஸ் அமைப்புக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications