பிளஸ்டூ தேர்வு துவக்கம்-வினாத்தாளில் குளறுபடி
சென்னைதமிழகம் மற்றும் புதுவையில், பிளஸ்டூ பொதுத் தேர்வுகள் இன்று தொடங்கின. இன்று தமிழ் முதல் தாள் தேர்வு நடந்தது. ஆனால், ரத்துசெய்யப்பட்ட பாடப் பகுதியில் இருந்து கேள்வி கேட்டதால் டூ மாணவ, மாணவிகள் குழப்பமடைந்தனர்.
பள்ளி இறுதிப் படிப்பான பிளஸ் டூ தேர்வு இன்று காலை தொடங்கியது. 21ம் தேதி வரை தேர்வு நடைபெறுகிறது.மொத்தம் 5,62,710 மாணவ, மாணவியர் தேர்வு எழுதுகின்றனர். இவர்கள் தவிர 50,000 தனித் தேர்வர்களும் பரிட்சை எழுதுகின்றனர். இதற்காக1,530 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் 134 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
முதல் நாளான இன்று தமிழ் முதல் தாள் தேர்வு நடந்தது.
குளறுபடி: மாணவர்கள் குழப்பம்
ஆனால், வினாத் தாளின் பாகம் 2ல் 4 மதிப்பெண்களுக்கு 3 கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. அதில் 2ம் கேள்வியாக வினை திட்பம் பற்றிவள்ளூவர் கூறுவதை எழுதுக? என்று கேட்கப்பட்டு இருந்தது.
இந்த வினை திட்பம் அதிகாரம் தமிழ் பாடத் திட்டத்தில் இருந்து ரத்து செய்யப்பட்ட பகுதி என மாணவர்கள் தெரிவித்தனர்.
இதனால் 4 மதிப்பெண்கள் இழக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே போனஸ் மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்று மாணவர்கள்கோரியுள்ளனர்.
இதற்கிடையே சிபிஎஸ்இ வழிக் கல்வி பயிலும் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வும் இன்று தொடங்கியது. இதில், நாடு முழுவதும் 12.07லட்சம் மாணவர்கள் தேர்வெழுதுகின்றனர்.












Click it and Unblock the Notifications