இரு பெண்கள், ஒரு சண்டை: பலத்த கடி!
சென்னை:சென்னை தண்டையார்பேட்டையில் இரு பெண்களுக்கு இடையே நடந்த சண்டையில், ஒரு பெண்ணின் ஜாக்கெட்டைக் கிழித்து மார்பைக் கடித்துவிட்டார் இன்னொரு பெண்.
தண்டையார்பேட்டை குமரன் நகர் முதலாவது தெருவில் வசித்து வருபவர் மகேஷ். இவரது மனைவி கெளரி. இருவரும் வாடகை வீட்டில் வசித்துவருகின்றனர். வீட்டைக் காலி செய்யுமாறு ஹவுஸ் ஓனர் கூறியதால் மூப்பனார் நகரில் ஒரு வீட்டை பார்த்தனர்.
அடுத்த நாள் வந்து அட்வான்ஸ் பணத்தைத் தருவதாக கூறி விட்டு கெளரி வந்தார். கெளரி பார்த்து விட்டுச் சென்ற வீட்டில் தற்போது ராணிஎன்பவர் தனது கணவருடன் வசித்து வருகிறார். இவருக்கும், கெளரிக்கும் ஏற்கனவே ஏதோ பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்ததுவந்ததாம்.
கெளரி தான் குடியிருக்கும் வீட்டைப் பார்த்து விட்டுச் சென்ற தகவலை அறிந்த ராணி, ஹவுஸ் ஓனரின் மனைவி கற்பகத்திடம் போய், கெளரிமோசமான பெண். அவருக்கு வீட்டை வாடகைக்கு விடாதீர்கள் என்று கூறினாராம்.
இதைக் கேட்டு அதிர்ந்த கற்பகம் அடுத்த நாள் ராணி அட்வான்ஸ் கொடுக்க வந்தபோது வீட்டைத் தர முடியாது என்று கூறியுள்ளார். இதைக்கேட்டு குழம்பிய கெளரி, ராணிதான் இதற்குக் காரணம் எனத் தெரிய வந்து அவரிடம் சண்டை போட்டுள்ளார்.
பெண்கள் சண்டையாச்சே! வாய்ச் சண்டை முற்றி கைலகலப்பு, குடுமிபிடி என உருமாறி தெருவே நாறிப் போனது. சண்டையின் உச்சகட்டமாக,கெளரியை கீழே தள்ளி அவர் மீது ஏறி அமர்ந்து கொண்டு சரமாரியாக அடித்த ராணி, ஒரு கட்டத்தில் கோபம் அதிகமாக கெளரியின்ஜாக்கெட்டை கிழித்து மார்பையும் கடித்து வைத்து விட்டார்.
காயமடைந்த கெளரி ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ராதாகிருஷ்ணன் நகர் போலீஸார்விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications