பிரதமருடன் அதிமுக-மதிமுக எம்பிக்கள் சந்திப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி:காவிரி விவகாரம் தொடர்பாக அதிமுக மாநிலங்களவை எம்பிக்கள் இன்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினர். அப்போது மதிமுகஎம்பிக்கள் இருவரும் உடன் சென்றனர்.
அதிமுகவுக்கு மக்களவையில் எம்பிக்கள் இல்லை. மாநிலங்களவையில் தான் 12 எம்பிக்கள் உள்ளனர். மதிமுகவுக்கு மக்களவையில் 2 எம்பிக்கள்உள்ளனர் (எல்.ஜி, செஞ்சி வெளியேறிவிட்டனர்).
இந் நிலையில் இன்று காலை பி.ஜி.நாராயணன், தினகரன் ஆகியோர் தலைமையில் அதிமுக-மதிமுக எம்பிக்கள் பிரதமரை அவரது அலுவலகத்தில்சந்தித்தனர்.
அப்போது காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை உடனடியாக மத்திய அரசின் கெஜட்டில் வெளியிட வேண்டும் என்று கோரி மனு கொடுத்தனர்.












Click it and Unblock the Notifications