பட்ஜெட் எதிரொலி: குடம், செருப்பு, வாளிஸ்கேல், ஜியாமட்ரி பாக்ஸ் விலை ஜிவ்
சென்னை:மத்திய பட்ஜெட்டில் கல்வி நிதிக்கான துணை வரி 3% உயர்த்தப்பட்டதால் ஏழைகள் அதிகம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் குடம், வாளி, செருப்பு,மாணவர்கள் பயன்படுத்தும் ஸ்கேல் உள்ளிட்டவற்றின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.
மத்திய பட்ஜெட்டில் 2 சதவீதமாக இருந்த கல்வி நிதிக்கான துணை வரி 3% ஆக உயர்த்தப்பட்டு விட்டது. இந்த துணை வரி உயர்வால், ஏழைமக்கள் அதிகம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
குறிப்பாக பிளாஸ்டிக் வாளி, குடம், கேன், தண்ணீர் அள்ளும் மக், பிளாஸ்டிக் செருப்பு, மாணவ மாணவியர்கள் அன்றாடம் பயன்படுத்தும்ஸ்கேல், ஜியாமட்ரி பாக்ஸ் உள்ளிட்டவற்றின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.
ஒரு பிளாஸ்டிக் குடத்தின் இன்றைய விலை ரூ. 43 .தல் 45 ஆக உள்ளது. முன்பு இது 40 ரூபாய் வரைக்கும் கிடைத்தது. அதேபோல பிளாஸ்டிக்கேன் விலையும் உயர்ந்து விட்டதால் அதில் அடைத்து விற்கப்படும் மினரல் வாட்டரின் விலையும் உயரத் தொடங்கியுள்ளது.
இதேபோல ரெடிமிக்ஸ் இட்லி, தோசை மாவு ஆகியவற்றை அடைத்து விற்கப் பயன்படுத்தும் பாலிதீன் பிளாஸ்டிக் பையின் விலையும் ஏறிவிட்டது. இதனால் இட்லி, தோசை மாவின் விலையும் கூடி விட்டது.
சாதாரண பிளாஸ்டிக் செருப்பும் கிடுகிடுவென விலையேற்றத்தைக் கண்டுள்ளது. ஸ்கேல், ஜியாமட்ரி பாக்ஸ் ஆகியவற்றின் விலையும் உயர்ந்துவிட்டதால் மாணவ, மாணவியர் கவலை அடைந்துள்ளனர். அவர்களை விட பெற்றோர்களுக்குத்தான் பலமுனை கவலை!
இதை விடக் கொடுமை, நோயாளிகளுக்கு ஊசி போட பயன்படுத்தப்படும் சிரிஞ்சுகள், குளுக்கோஸ் அடைக்கப் பயன்படுத்தும் பிளாஸ்டிக்பாட்டில்கள் உள்ளிட்டவற்றின் விலையும் உயர்ந்து விட்டதாம். இந்த விலை உயர்வு நோயாளிகளின் தலையில் தான் விடியும்.
இப்படி ஒட்டுமொத்தமாக நேரடி வரி விதிப்புக்கு ஆளாகும் அனைத்துப் பொருட்களின் விலையும் கிடுகிடுவென உயரத் தொடங்கியுள்ளது.
இதில் ரொம்பக் கொடுமையான விஷயம், விமானம், கார்கள் தயாரிப்பின்போது பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் விலைமட்டும்உயராமல், குறைந்துள்ளதாம்! காரணம், இந்தப் பொருட்களுக்கான உற்பத்தி வரி 12சதவீதத்திலிருந்து 7 சதவீதமாக குறைக்கப்பட்டதுதான்.
இந்தியாவில் உள்ள எல்லோரும் பணக்காரர்களாகி விட்டார்கள் என்று என்று மத்திய அரசும், ப.சிதம்பரமும் நினைத்து விட்டார்களோ என்னவோ!












Click it and Unblock the Notifications