விடுதலைப் புலிகளுடன் நார்வே தூதர் பேச்சு
கொழும்பு:நார்வே தூதர் ஹான்ஸ் பிரட்ஸ்கர், விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வனுடன் இன்று பேச்சு நடத்தினார். அதேசமயம்,யாழ்ப்பாணத்தில் நடந்த மோதலில் 3 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இலங்கை ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான மோதல்கள் அதிகரித்து வரும் நிலையில் நார்வே தூதர் ஹன்ஸ் பிரட்ஸ்கர்கொழும்பு வந்துள்ளார்.
இன்று அவர் கிளிநொச்சி சென்று விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச் செல்வன் உள்ளிட்டோரை சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பு குறித்து விடுதலைப் புலிகள் தரப்பில் தெரிவிக்கையில், ஹன்ஸ் பிரட்ஸ்கர் கிளிநொச்சியில் புலிகள் அமைப்பின் அரசியல் தலைவரைசந்தித்துப் பேசினார் என்று மட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தையில் என்ன அம்சங்கள் இடம்பெற்றன என்பது குறித்துதெரிவிக்கப்படவில்லை.
இதற்கிடையே, யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்திற்கும் இடையே நடந்த சண்டையில் 3 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இதுகுறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் பிரசாத் சமரசிங்கே கூறுகையில், இன்று காலை நடந்த மோதலில், 3 ராணுவ வீரர்கள்கொல்லப்பட்டனர். விடுதலைப் புலிகள் தரப்பிலும் சிலர் உயி>ழந்தனர் என்றார்.












Click it and Unblock the Notifications