பஸ் கட்டணத்தை உயர்த்தவில்லை: அமைச்சர்

Subscribe to Oneindia Tamil

சென்னை:திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பஸ் கட்டணம் ஒரு பைசா கூட உயர்த்தப்படவில்லை என்று போக்குவரத்து அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.

சென்னை நகரில் எல்லோ லைன், ப்ளூ லைன், எம் சர்வீஸ் என சிறப்புப் பேருந்துகளை அறிமுகப்படுத்தி அதிக அளவில் கட்டணம்உயர்த்தப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா நேற்றும் குற்றம் சாட்டியிருந்தார்.

இதற்கு தமிழக போக்குவரத்து அமைச்சர் கே.என். நேரு மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், அதிமுக அரசு கடந்த 2001ம்ஆண்டு ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே எம் சர்வீஸ் என்ற புதிய வகை பேருந்துகள் இயக்கப்பட்டு, அப்பேருந்துகளுக்கு குறைந்த பட்சக்கட்டணம் 3 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டு அறிவிப்பு வெளியிட்டது.

அதே எம் சர்வீஸ் பேருந்துகள்தான், அதே மூன்று ரூபாய் கட்டணத்தில்தான் இன்றும் ஓடிக் கொண்டிருக்கின்றன. இந்த அரசினால் ஒரு பைசா கூடஇதுவரை உயர்த்தப்படவில்லை.

உண்மை இவ்வாறிருக்க அதிமுக அரசு நிர்ணயித்த கட்டணத்தை இந்த அரசு உயர்த்தியதாக கூறுவது அப்பட்டமான பொய்யாகும் என்றுகூறியுள்ளார் நேரு.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+